செய்திகள் :

டாலர்தான் ராஜா..! பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

post image

அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்துக்கு டாலர்தான் ராஜா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை நிறைவடைந்தது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நிறுவன நாடுகள் முதன்மை உறுப்பினர்களாக இருந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவை இணைந்துள்ளன.

மொத்த உலகளாவிய உற்பத்தியில் 39 சதவிகிதத்தை கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகள் இணைந்து டாலருக்குப் போட்டியாக பிரிக்ஸ் கரன்சியை வெளியிடுவது பற்றி 2023 ஆம் ஆண்டில் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவான நாடுகள் விரைவில் 10 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ளப் போவதாகவும், அமெரிக்க டாலரைக் காயப்படுத்தவே, பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “டாலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பிரிக்ஸ் நாடுகள் (இந்தியாவும்) 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும். டாலர்தான் அனைவருக்கும் ராஜா. டாலருக்கென்று ஒரு தரமிருக்கிறது.

அவர்கள் என்னிடம் விளையாட்டு காட்டுகிறார்கள். எனக்கும் விளையாட்டு காட்டத் தெரியும். டாலருக்கு சவால் காட்ட பிரிக்ஸ் நாடுகள் முயன்று வருகின்றனர். இதனால், அவர்கள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் அந்த விலை கொடுக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பிரிந்துவிட்டன. அதில், ஒன்று இரண்டு மட்டும் கூட்டாக சுற்றிக் கொண்டிருக்கின்றன” என்றார்.

‘Dollar is king’: Donald Trump says BRICS including India will face 10% tariff

இதையும் படிக்க :6-ஆம் வகுப்பினரில் 47% பேருக்கு வாய்ப்பாடு சரிவர தெரியவில்லை - மத்திய கல்வி அமைச்சக ஆய்வில் தகவல்

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றத... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க

துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! என்ன காரணம்?

துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் ... மேலும் பார்க்க

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்... மேலும் பார்க்க

தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதுநிலை ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நிறுவனத்தில் தொடக்க நிலைப் பணியாளராக 5 ஆண்டுகள் ரிஷி சுனக் பணிபுர... மேலும் பார்க்க