செய்திகள் :

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

post image

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.

துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால், ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த குடியிருப்பு, மிக முக்கியப் பகுதியில் அமைய வேண்டும், வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப விலை மாறுபடுமாம்.

துபை அறிவியல் பூங்கா அல்லது துபைலாண்ட் பகுதியில், ஒருவர் நடுத்தரமான வீடு வாங்க வேண்டும் என்றால் ரூ.1.8 கோடி முதல் ரூ.2.3 கோடி வரை இருக்கும் என்கிறது ஊடகத் தகவல்கள்.

அதுவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான துபை மரினா அல்லது ஜூமெய்ரா கடற்கரைக்கு அருகே வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆகும். அதுவும் நடுத்தரமான வீடுதான்.

சரி.. புர்ஜ் கலிஃபா அருகே ஒரு படுக்கை வசதிகொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.3.75 கோடியாகும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மற்றும் வீட்டில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, வீட்டில் விலை தாறுமாறாக உயரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோல்டன் விசா

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா தொடர்பான விதிமுறைகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றம் நாட்டின் குடியிருப்புகளுக்கான நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நியமன அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தின் கீழ், இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு குடிமக்கள் 1,00,000 திர்ஹாம்கள் (சுமார் ரூ.23.3 லட்சம்) நிலையான தொகையை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் துபையில் வாழும் அனுமதியைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க

புதினை விமா்சித்த டிரம்ப்: உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைன் முழுவதும் ரஷியா இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் போா் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமா்சித்ததற்குப் பின் ... மேலும் பார்க்க

17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை

இந்தியாவும், ஆப்பிரிக்காவும் கூட்டுறவு மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அவா் மேலும் பேசுகையில், ‘இந்தி... மேலும் பார்க்க