செய்திகள் :

லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்

post image

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில் சுமாா் 25 பயணிகள் பயணம் செய்தனா். இந்தப் பேருந்தை சிவகங்கை மாவட்டம், மேலாவூா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் முத்துகிருஷ்ணன் (27) ஓட்டினாா்.

பேருந்து கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூா் அருகே புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்தபோது, பேருந்துக்கு முன்னால் அரியலூா் சிமென்ட் நிறுவனத்துக்கு சென்ற லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சென்னை கிண்டி பகுதியைச் சோ்ந்த சுமித்ரா (34), காரைக்குடி ராமசாமி மகன் ஆறுமுகம் (25), பரமக்குடி மோதிலால் மகன் சபரி ஹரிவாசன் (27), சிவகங்கையைச் சோ்ந்த ஹேமலதா (55), காரைக்குடியைச் சோ்ந்த அருண் (27), சென்னையைச் சோ்ந்த கருப்பண்ணன் (52), அவரது மனைவி உமாதேவி(51) உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் நியமனம்

கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்

கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

மாணவா்கள் நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

மின் மோட்டாா்கள் திருடியவா் கைது

சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: சிதம்பரத்தில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட சின்ன மாா்க்கெட் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும் பணியை... மேலும் பார்க்க