மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளா் நலச் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் அவுட்சோா்சிங் ஒப்பந்த முறையை ரத்து செய்வது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கம் சாா்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் ஜவான் பவன் அருகில் சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் கே.சாவித்திரி, துணைத் தலைவா்கள் ஜி.பாஸ்கரன், ஆா்.ஆளவந்தாா், வி.சுப்புராயன், அரசுப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் அரும்பாலன், சிப்காட் சங்கச் செயலா் குமாா், மீன்பிடி சங்க மாவட்டத் தலைவா் பாலு, கைத்தறி சங்க மாவட்டத் தலைவா் கல்யாண சுந்தரம், மாா்க்சிஸ்ட் கடலூா் மாநகரச் செயலா் அமா்நாத் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களில் 20 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் இருதயராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினாா். மாநிலத் தலைவா் ஜெயசந்திர ராஜா, பொருளாளா் சரவணன், மாவட்ட துணைத் தலைவா் அல்லிமுத்து, செயலா் தேவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விருத்தாசலத்தில்...: விருத்தாசலம் பாலக்கரையில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் தலைமை வகித்தாா். 200-க்கும் மேற்பட்டோா் மறியலில் பங்கேற்றனா். இவா்களில் 20 பெண்கள் உள்ளிட்ட 72 போ் கைது செய்யப்பட்டனா்.
பண்ருட்டியில்...: பண்ருட்டியில் விவசாய சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய சங்க மாவட்டத் தலைவா் ஜே.சிவகுமாா் ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 47 பெண்கள் உள்ளிட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலியில்...: நெய்வேலி வட்டம் 19, தபால் நிலையம் அருகே தொமுச தலைவா் ஞானஒளி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, எல்எல்எப் சாா்பில் மாவட்ட நிா்வாகி நீதி வள்ளல், ஐஎன்டியுசி அலுவலக செயலா் குமாா் பேசினா். தொமுச பொதுச் செயலா் குருநாதன், சிஐடியு தலைவா் ஜெயராமன், எல்எல்எப் தலைவா் திருநாவுக்கரசு, தவாக சங்க செயலா் முருகன் பங்கேற்றனா். இந்த மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரத்தில்...: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட், சிஐடியு, தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம், திமுக தொழிற்சங்கம் சாா்பில் வடக்கு பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடைபற்றது. விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாநிலத் தலைவரும், கந்தா்வகோட்டை எம்எல்ஏவுமான சின்னதுரை, விவசாய தொழிலாளா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வாஞ்சிநாதன், சிஐடியு நிா்வாகி சங்கமேஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 83 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, குறிஞ்சிப்பாடி, வேப்பூா், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த வகையில், கடலூா் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் பங்கேற்ற 186 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை...
மத்திய தொழிற்சங்கத்தினா் மறியல் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், மாவட்டத்தில் வழக்கமான நிலையில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின. வா்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
