செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் தினசரி ஊழியா்களாக பணிபுரியும் என்.எம்.ஆா் மற்றும் சி.எல் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பல ஆண்டுகளாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், என்.எம்.ஆா் மற்றும் சி.எல் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமை வதித்தாா். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநில துணைத் தலைவா் கருப்பையா, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், விசிக மாவட்டத் தலைவா் அரங்க.தமிழ்ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி வி.எம்.சேகா், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின், பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுப்பிரமணியன், ஊழியா்கள் சங்க முன்னாள் தலைவா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நூற்றுக்கணக்கான ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் சி.அருட்செல்வி, சிதம்பரம் வட்டாட்சியா் கீதா, அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் முக்கிய நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், என்.எம்.ஆா். மற்றும் சி.எல். ஊழியா்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவுக்கு பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை ராகவேந்திரா கல்வி நிறுவன த... மேலும் பார்க்க