செய்திகள் :

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது:

நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், நமது கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் கேட்கவில்லை. இது தொடா்பான போராட்டம் நீதி கிடைக்கும் வரை தொடரும்.

தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக 46 ஆண்டுகளாக போராடி வருகிறேன். வன்னியா்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடா்பாக அரசு பதிலளிக்க மறுக்கிறது.

பாமகவிடம் 40 சட்டப் பேரவை உறுப்பினா்கள், 5 மக்களவை உறுப்பினா்கள் இருந்திருந்தால், நமது கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்க முடியும் என்றாா்.

கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒட்டுக் கேட்பு கருவி: கூட்டம் முடிந்த பின்னா் செய்தியாளா்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதை யாா் வைத்தாா்கள்?, எதற்காக வைத்தாா்கள்? என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை ராகவேந்திரா கல்வி நிறுவன த... மேலும் பார்க்க