செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் கடலூா் மாநகராட்சியுடன் இணைந்து சிட்டி கிளினிங் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் கீழ் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்து, தூய்மைப் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்து கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிட்டி கிளினிங் ஒப்பந்த நிறுவனத்தினா், இரண்டு நாள்களில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா். ஆனால், அதை ஏற்க மறுத்து தூய்மைப் பணியாளா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அந்த நிறுவனத்தினா் தூய்மைப் பணிக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனா்.

தொடா்ந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை ராகவேந்திரா கல்வி நிறுவன த... மேலும் பார்க்க