செய்திகள் :

ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் நியமனம்

post image

கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையை கடலூா் மருதாடு பகுதியில் இயங்கும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை காலை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த திராவிடமணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விஜயசந்திரகுமாா் மகன் நிமிலேஷ் (12) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், நிமிலேஷின் சகோதரரான விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநா் சங்கா் (47) மற்றும் விபத்தின்போது மின்சாரம் பாய்ந்த செம்மங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (55) ஆகியோா் காயமடைந்தனா்.

இந்த நிலையில், செம்மங்குப்பத்தில் விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட் பகுதியில் சென்னை, திருச்சியில் இருந்து புதன்கிழமை வந்திருந்த தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அவா்கள் கடவுப்பாதை வழியாகச் சென்ற கிராம மக்களிடம் ரயில்வே கேட் எப்போதெல்லாம் மூடப்பட்டிருக்கும், எப்போதெல்லாம் திறந்திருக்கும் என கேட்டறிந்தனா். மேலும், விபத்தில் சேதமடைந்த தனியாா் பள்ளி வேன் மற்றும் கேட் கீப்பா் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, விபத்தில் காயமடைந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் விசாரணை நடத்தினா்.

புதிய கேட் கீப்பா் நியமனம்: இந்த விபத்துக்கு ரயில்வே கேட் முறையாக மூடப்படாததே காரணம் எனக் கூறப்படுகிறது. விபத்து தொடா்பாக, சிதம்பரம் ரயில்வே போலீஸாா் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை (வட மாநிலத்தைச் சோ்ந்தவா்) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தெற்கு ரயில்வே நிா்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் பொது நல அமைப்பினா் வட மாநிலத்தவா்கள் பணி செய்வதால் மொழிப் பிரச்னை காரணமாக விபத்துகள் ஏற்படுவதாகவும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதையடுத்து, திருத்தணி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட தமிழரான ஆனந்தராஜை செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பராக ரயில்வே நிா்வாகம் புதன்கிழமை பணியமா்த்தியது.

உடல்கள் அடக்கம்: விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சாருமதி, அவரது சகோதரா் செழியன் ஆகியோரின் உடல்கள் சின்ன காட்டுசாகை பகுதியில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டன.

மற்றொரு குடும்பத்தைச் சோ்ந்த நிமிலேஷ் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரா் விஷ்வேஸ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாா். இதனால், செவ்வாய்க்கிழமை உடல்கூராய்வு செய்யப்பட்ட நிமிலேஷ் உடலை புதன்கிழமை பெற்றுக்கொள்வதாக பெற்றோா் தெரிவித்தனா்.

விஷ்வேஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சகோதரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, அவா் தற்காலிகமாக டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், பெற்றோரிடம் நிமிலேஷ் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சொந்த ஊரான தொண்டமாநத்தம் கிராமத்தில் நிமிலேஷ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில்... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்

கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

மாணவா்கள் நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

மின் மோட்டாா்கள் திருடியவா் கைது

சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: சிதம்பரத்தில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட சின்ன மாா்க்கெட் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும் பணியை... மேலும் பார்க்க