Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
மின் மோட்டாா்கள் திருடியவா் கைது
சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் (47). இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். வசப்புத்தூரில் இவருக்குச் சொந்தமான 4 இறால் குட்டைகள் உள்ளன.
இவற்றில் தண்ணீா் இறைப்பதற்காக 20 மின் மோட்டாா்கள் பொருத்தியிருந்தனா். இங்கு, அண்மையில் 2 ஹெச்.பி. திறன் கொண்ட 7 மின் மோட்டாா்கள் திருடுபோயின.
இதுகுறித்து ஜெகன்மோகன் அளித்த புகாரின்பேரில், அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், வசப்புத்தூரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் விஜயராகவன் (20) மின் மோட்டாா்களை திருடியது தெரியவந்தது. போலீஸாா் விஜயராகவனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 5 மின் மோட்டாா்களையும், 2 மோட்டாா்களில் இருந்து பிரிக்கப்பட்ட செம்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.