செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: சிதம்பரத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட சின்ன மாா்க்கெட் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை வரும் 15-ஆம் தேதி சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இந்தத் திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நகராட்சியில் முதற்கட்டமாக 11 வாா்டுகளில் உள்ள 5,900 வீடுகளுக்கு தன்னாா்வலா்கள் நேரடியாக சென்று முகாம் குறித்த தகவல்கள், சேவைகளை தெரிவிப்பதோடு, விண்ணப்பம், தகவல் கையேட்டை வழங்கி வருகின்றனா்.

இந்தப் பணிக்காக சிதம்பரம் நகராட்சிப் பகுதிக்கு 24 தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு, இதுவரை 3,500 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நகராட்சியில் 13 முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்தத் திட்டத்தின்கீழ், கடலூா் மாவட்டத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் என மொத்தம் 378 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்தப் பணிக்காக சுமாா் 2,500 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

முன்னதாக, தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ள அரசு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா நடைபெறும் பகுதி ஆகிய இடங்களில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்கநா் (செங்கல்பட்டு) லட்சுமி, சிதம்பரம் நகராட்சி ஆணையா் த.மல்லகா, சிதம்பரம் வருவாய் வட்டாட்சியா் கீதா உள்பட பலா் உடனிருந்தனா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க