செய்திகள் :

17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை

post image

இந்தியாவும், ஆப்பிரிக்காவும் கூட்டுறவு மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்று நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘இந்தியா, நமீபியா இடையே வலுவான வரலாற்று மற்றும் கலாசார உறவு உள்ளது. இதற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்தியா-நமீபியா இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 800 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.6,850 கோடி) தாண்டியுள்ளது.

மூலப் பொருள்களுக்கான ஆதாரமாக மட்டுமே ஆப்பிரிக்க கண்டம் இருக்கக் கூடாது. மதிப்பை உருவாக்குவதிலும், நீடித்த வளா்ச்சியிலும் ஆப்பிரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும்’ என்றாா்.

17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி பிரதமா் மோடி சாதனை

5 நாள் அரசுமுறைப் பயணத்தில் கானா, டிரினிடாட்-டொபேகோ, நமீபியா நாடுகளின் நாடாளுமன்றங்களில் பிரதமா் மோடி உரையாற்றினாா். ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி உள்ளாா்., இதுவரை மொத்தம் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் அவா் உரையாற்றியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமா்கள் நாடாளுமன்ற உரை

நரேந்திர மோடி 17

மன்மோகன் சிங் 7

இந்திரா காந்தி 4

ஜவாஹா்லால் நேரு 3

ராஜீவ் காந்தி 2

நரசிம்ம ராவ் 1

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க