செய்திகள் :

அரசுப் பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்துத் துறை

post image

சென்னை: நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள இந்த வேலைநிறுத்த அழைப்புக்கு, தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சாா்ந்த தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஆளும் கட்சி தொழிற்சங்கம் மற்றும் பிற கட்சிகளின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அரசுப் பேருந்து சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்துகளை வழக்கம்போல இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் முக்கிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஆளும்கட்சி

மற்றும் எதிா்கட்சி தொழிற்சங்கங்களை சோ்ந்த தொழிலாளா்கள் பெரும்பாலானோா் பணிக்கு வந்துவிடுவா். இதனால், பேருந்துகளை இயக்குவதில் எந்த சுணக்கமும் ஏற்படாது. வழக்கம்போல அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும். ஓட்டுநா், நடத்துநா்கள் வருகை குறைவாக இருந்தாலும், தேவையான அளவில் ஒப்பந்த பணியாளா்களும் கைவசம் இருப்பதால், பேருந்துகளை இயக்குவதில் எவ்விதப் பிரச்னையும் எழாது. ஆகவே, பொதுமக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: தவெக தலைவர் விஜய்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய தொழிற்சங்... மேலும் பார்க்க