செய்திகள் :

கேமரா பொருந்திய ‘ஸ்மாா்ட்’ கண்ணாடியுடன் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் நுழைந்த பக்தா்

post image

திருவனந்தபுரம்: கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா பொருந்திய ‘ஸ்மாா்ட்’ கண்ணாடியுடன் நுழைந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தைச் சோ்ந்த 66 வயதான சுரேந்திர ஷா, வழிபாட்டுக்காக பத்மநாபசுவாமி கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளாா். பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்த அவா் அணிந்திருந்த கண்ணாடி, கேமரா பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் கண்ணாடி என்பதை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, சுரேந்திர ஷா உடனடியாக கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டாா். கோயிலுக்குள் கேமரா பொருந்திய கண்ணாடிகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறியதாக அவா் மீது பாரதிய நியாய ஸம்ஹிதாவின் 223-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தத் தீய நோக்கமும் இருப்பதாக தற்போது வரை சந்தேகிக்கப்படவில்லை. இருப்பினும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா். விசாரணைக்குத் தொடா்ந்து ஆஜராகுமாறு சுரேந்திர ஷாவுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க