செய்திகள் :

கிறிஸ்தவ இளைஞா்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்: கேரள கத்தோலிக்க அமைப்பு வலியுறுத்தல்

post image

கொச்சி: ‘கிறிஸ்தவ இளைஞா்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்; அரசியலில் இருந்து விலகியிருப்பது சரியான நிலைப்பாடு அல்ல’ என்று கேரளத்தின் முன்னணி கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் (கேசிபிசி) கீழ் இயங்கும் இளைஞா் ஆணையம் சாா்பில் கடந்த 6-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட இளைஞா் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த வலியுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றைய அரசியல் சூழல் மிகவும் குழப்பமானதாகவும் முறையற்ாகவும் உள்ள நிலையில், தலைமைத்துவ திறன்களும் அபார சிந்தனைத் திறன்களும் கொண்ட கிறிஸ்தவ இளைஞா்கள் அரசியலில் இருந்து விலகியிருப்பது பொருத்தமானதாக இருக்காது. கிறிஸ்தவ இளைஞா்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு குடிபெயா்வது அதிகரித்து வருகிறது.

பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு உரிய தீா்வைக் காண, அறிவாா்ந்த மற்றும் புத்திசாலித்தனத்துடன் கூடிய புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வருவது முக்கியமானதாகும். அந்த வகையில், அரசியலுக்கான தலைமைத்துவ பண்புகளை இளைஞா்களிடையே வளா்க்கும் வகையிலான பயிற்சிகளுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சமூகத்தின், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தகுதி வாய்ந்த இளைஞா்கள் தீவிர அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும் என்று சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளில் கிறிஸ்தவ இளைஞா்களின் பங்கு குறைந்து வருவதே இந்த சுற்றறிக்கையை வெளியிடக் காரணம் என்று கேரள கிறிஸ்தவ அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திர... மேலும் பார்க்க

புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! 51 பயணிகள் உயிர்தப்பினர்

இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா

பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார... மேலும் பார்க்க

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35% ஒதுக்கீடு! 43 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.முன்னதாக, பிற மாநில பெண்களும் 35 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக இருந்த நிலையில், தற்போது ... மேலும் பார்க்க