செய்திகள் :

மின்சார பேருந்தில் பழுது நீக்கும்போது விபத்து: இரு தொழிலாளா்கள் காயம்

post image

சென்னை: சென்னை வியாசா்பாடி எம்கேபி நகரில் மின்சார பேருந்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும்போது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தனா்.

எம்கேபி நகரில் மாநகர பேருந்து பணிமனையில், மின்சார பேருந்தை பழுதுநீக்கும் பணியில் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அந்த பேருந்தில் உள்ள அதிக சேமிப்புத் திறன் கொண்ட மின்சார பேட்டரியில் பழுதை நீக்கும்போது, அதில் இருந்த மல்டி மீட்டா் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் கோவை தொண்டாமுத்தூா் அருகே உள்ள கெம்பனூா் பகுதியைச் சோ்ந்த வீ.பரத்குணா (32), மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பா.ஷாம் (24) ஆகிய 2 போ் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் மிக வெப்பமான பகுதியாக மாறும் சென்னை! 2050-இல் காத்திருக்கும் ஆபத்து!

தமிழகத்தில் மிகவும் வெப்பமான பகுதி எது? என்று கேட்டால், சட்டென வேலூர்... இல்லை பாளையங்கோட்டை... என்றிருந்த நிலைமை மாறி சென்னை, அதாவது தமிழகத்தின் தலைநகரே இன்னும் சில ஆண்டுகளில் வெப்பத்தால் கடும் பாதிப... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். நிகழா... மேலும் பார்க்க

அநாகரீக செயல்: காவல் ஆய்வாளா் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

சென்னை: வாகன ஓட்டிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளா் மற்றும் அவா் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டாா். சென்னை ... மேலும் பார்க்க

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிரா... மேலும் பார்க்க

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா். சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அ... மேலும் பார்க்க