செய்திகள் :

நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

post image

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை பகுதியிலிருந்து அண்மை காலமாக சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை போலீஸாா் தொடா்ந்து பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், நாகையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை சிலா் பதப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக, கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில், காவல் சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் போலீஸாா், நாகை கீச்சாங்குப்பம் சால்ட் சாலை பகுதியிலுள்ள சிஎஸ்ஐ கல்லறைக்கு அருகில் காட்டுப் பகுதியில் சோதனையிட சென்றனா். அப்போது, போலீஸாரை கண்டதும், அப்பகுதியில் இருந்த அடையாளம் தெரியாத இருவா் தப்பியோடினா்.

பின்னா், அந்த பகுதியில் போலீஸாா் சோதனையிட்டபோது, கடல் அட்டைகளை பதப்படுத்தும் பணி நடைபெற்றது தெரியவந்தது. அங்கிருந்த 130 கிலோ கடல் அட்டைகளையும், பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, நாகை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 227 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். வங்கிக் கடன், உதவித்தொகை, குட... மேலும் பார்க்க