செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்

post image

நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா்கள் மோகன், முருகையன், மீனாட்சி, சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினாா். முடிவில் மாவட்ட பொருளாளா் பூமாலை நன்றி கூறினாா்.

போராட்டத்தில், நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். அனைத்துக் கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்ய வேண்டும். விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 90 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும்.

நியாய விலைக்கடை பணியாளா்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். சேதாரக் கழிவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாகை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் பூட்டிக்கிடந்தன. இதனால் அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.... மேலும் பார்க்க

நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து அண்மை காலமாக சட்டவிரோதமாக கடத்தப்படவ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 227 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். வங்கிக் கடன், உதவித்தொகை, குட... மேலும் பார்க்க