செய்திகள் :

``ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' - குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!

post image

இப்போதைய உலகின் மந்திரச் சொல் 'AI, ChatGPT'. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய சில பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் இடமாகவும் ChatGPT போன்ற உபகரணங்கள் இருக்கின்றன.

அப்படி அமெரிக்காவில் ஒரு பெண் ChatGPT உதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் வரை கடனை அடைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டவை...

Chat GPT

ரூ19.7 லட்சம் கடன்

என் பெயர் ஜெனிஃபர் ஆலன், எனக்கு 35 வயது. நான் அமெரிக்காவின் டெலாவேரைச் சேர்ந்தவள். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். என் குடும்பத்தை சமாளித்துக்கொள்ளும் அளவிலான சம்பளம். அதனால் எனக்கு ஏற்படும் அவசர தேவைகளுக்கு கிரெடிட் கார்டை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

சமீபத்தில் எனக்கு குழந்தை பிறந்தது, சில மருத்துவ அவசரம் காரணமாக $23,000 (சுமார் ரூ19.7 லட்சம்) கடனாகிவிட்டது. அதை நினைக்கும்போதே தலை சுற்றும். எப்படியாவது இந்தக் கடனை அடைத்துவிட வேண்டும் என முடிவு செய்து தேடத் தொடங்கினேன்.

30 நாள் சேலஞ்ச்

அப்போதுதான் ChatGPTயிடம் கடனை அடைப்பது எப்படி என்பது குறித்து தேடினேன். ChatGPT எனக்கு 30 நாள் சேலஞ்ச் ஒன்றை கொடுத்தது. அதை செயல்படுத்தத் தொடங்கினேன். இப்போது சுமார் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன். அதாவது, ஒவ்வொரு நாளும், AI எளிமையான ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான வேலைகளை பரிந்துரைத்தது.

நிதி சுதந்திரம்

என்னிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத subscribe-களை ரத்து செய்தல், மறந்துபோன கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் போன்ற திட்டங்களை வழங்கியது. அதன் மூலம் என்னுடைய பழைய தரகுக் கணக்கில் $10,000 (ரூ. 8.5 லட்சம்) இருப்பதைக் கண்டுபிடித்தேன். இப்படி என்னிடம் பணம் இருப்பதை நான் மறந்தேவிட்டேன். ChatGPT ஐப் பயன்படுத்தி ஒரு பேன்ட்ரி அடிப்படையிலான உணவுத் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் மளிகைக் கட்டணத்தை மாதத்திற்கு ரூ. 50,000 குறைத்தேன்.

எந்த மந்திர தந்திரமும் இல்லை

இப்படி 30 நாள்களின் முடிவில், என் கடனில் பாதிக்கும் மேலான $12,078 (ரூ.10.3 லட்சம்) திருப்பிச் செலுத்தியிருந்தேன். இது எந்த மந்திர தந்திரமும் இல்லை. நம்முடைய விழிப்புணர்வு, உறுதி, எனது நிதிகளில் கவனம் செலுத்துவது போன்ற நாம் கண்டுகொள்ளாத பக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சாத்தியமானது. இப்போது மீதமுள்ள கடனை அடைக்க மற்றொரு 30 நாள் சவாலை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். உங்கள் பிரச்னைகளிலிருந்து விலகிச் செல்வதை நிறுத்துங்கள். எல்லாம் சரியாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மகனுக்கு நகைகள் போட்டு அழகு பார்த்து உயிரை மாய்த்த குடும்பம்.. சொத்து பிரச்னையால் சோகம்

ராஜஸ்தானில் சொத்து பிரச்னையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. அங்குள்ள பார்மர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவ்லால்(35). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பஜ்ரங்(9), ராம்தேவ்(8) ஆகிய இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

``ஸ்விட்ச், குழாய், எங்கும் எதிலும் தங்கம் தான்!'' - அரசு ஒப்பந்ததாரரின் தங்க வீடு.. வைரலான வீடியோ

அரசு ஒப்பந்ததாரர் என்றாலே பணம் தாராளமான புரளும். அதுவும் ஆளும் கட்சி அரசு ஒப்பந்தாரர் என்றால் சொல்லவேண்டாம். மத்திய பிரதேசத்தில் அரசு ஒப்பந்தாரர் அனூப் அகர்வால் என்பவர் புதிதாக மிகவும் கலைநயத்தோடு இந்... மேலும் பார்க்க

``I love U சொன்னது பாலியல் நோக்கமல்ல..'' - சிறை தண்டனையை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!

நாக்பூர் கட்டோலைச் சேர்ந்த 25 வயது இளைஞர், 17 வயது சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து ’ஐ லவ் யூ’ சொன்னதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு 2017 ஆம் ... மேலும் பார்க்க

குடிபோதையில் ஸ்பூனை விழுங்கிய நபர்; கனவில் விழுங்கியதாக புலம்பல்.. எண்டோஸ்கோபி மூலம் அகற்றம்

தாய்லாந்தில் 29 வயதான நபரின் வயிற்றிலிருந்த கரண்டியை மருத்துவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த கரண்டி எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்று அவர் கூறும் காரணம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து... மேலும் பார்க்க

Canada: ``இதுதான் கனடாவின் ரியாலிட்டி'' - இந்திய பெண்ணின் வைரல் இன்ஸ்டா பதிவு

கனடாவில் ஒரு வேலைவாய்ப்பு முகாமில் 5 அல்லது 6 இன்டெர்ன்ஷிப் இடங்களுக்கு இந்தியர்களும், மற்ற வெளிநாட்டு மாணவர்களும் நீண்ட வரிசையில் நிற்பதை இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருப்பது வைரல... மேலும் பார்க்க

``விண்வெளியில் இருப்பது வித்தியாசமாக உள்ளது..'' - பிரதமர் மோடியிடம் பேசிய சுபான்ஷு சுக்லா!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் மனிதர்களை சர்வதே... மேலும் பார்க்க