செய்திகள் :

TVK: ``பொதுமன்னிப்புக் கேட்டு பதவி விலகுங்கள் முதல்வரே!'' - ஆதவ் அர்ஜூனா காட்டம்!

post image

'செயற்குழுக் கூட்டம்!"

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தீர்மானம் வாசிக்கையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

தவெக செயற்குழுக் கூட்டம்
தவெக செயற்குழுக் கூட்டம்

'ஆதவ் பேச்சு!'

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, "ஓரணியில் திரள்வோம் என உறுப்பினர் சேர்க்கைக்காக வீடு வீடாக முதல்வர் சென்றுகொண்டிருக்கிறார். சிவகங்கையில் இளைஞர் துடிதுடிக்க கொல்லப்பட்டிருக்கும் சமயத்தில் 'அப்பா' என பொய்ப்பிரச்சாரம் செய்யும் முதல்வர் அந்த வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லவில்லை. எங்களின் தலைவர் ஒரு அண்ணனாக, மகனாக அவர்களின் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லி வந்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது.

மக்கள் விரோத திமுக ஆட்சியில் காவல் நிலையத்தில் 24 பேர் மரணமடைந்திருக்கின்றனர். அதிகார திமிர் கொண்ட ஆட்சியாளர்களே இதற்கு காரணம். காவல் மரணங்களை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சருக்கு கண்டனங்கள். இந்த முதல்வரும் அவர் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியினரும் ஒன்றிய அரசின் அமைப்புகளை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

ஆனால், சிவகங்கை வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறார். இது வெட்கமாக இல்லையா? உங்களின் மாநில சுயாட்சி எங்கே போனது? முதலமைச்சர் ஒட்டுமொத்த தமிழகத்திடமும் பொது மன்னிப்புக் கேட்டு உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்.' என்றார்.

`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்' - பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் - ராணுவத் துணைத் தலைவர் பேச்சு

ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, சீனா மற்றும் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதாக, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

ட்ரம்பின் தொலைபேசி அழைப்பு; ``அவர் கோபப்படுவார்..'' - கூட்டத்தை பாதியில் விட்டு கிளம்பிய புதின்!

ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் போன்கால் பேச்சுவார்த்தை - இது சமீபகாலம் தொடர்கதை ஆகும். நேற்றும் ட்ரம்ப் - புதி... மேலும் பார்க்க

Secularism: ``மதச்சார்பற்றவராக யாராலும் வாழ முடியாது.." - சங்கராச்சாரியார் பேச்சால் சர்ச்சை!

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில், "மதச்சார்பின்மை" என்ற வார்த்தை க... மேலும் பார்க்க

Putin: ``எங்கள் இலக்குகளை எட்டும் வரை ரஷ்யா பின்வாங்காது..'' - ட்ரம்ப்பிடம் புதின் திட்டவட்டம்!

ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ அதன் இலக்குகளை அடையாமல் பின் வாங்காது என்றும் ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகக இருப்பதாகவும் தெரிவித்ததாக ரஷ்... மேலும் பார்க்க

`பாரத மாதா படம்' - கவர்னர் நிகழ்ச்சியை ரத்து செய்த கேரள பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?

கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது ... மேலும் பார்க்க