செய்திகள் :

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

post image

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மும்பைக்கு அருகிலுள்ள மீரா சாலையில் ஒரு கடைக்காரர் மராத்தியில் பேசுவது ஏன் கட்டாயம் என்று கேள்வி எழுப்பியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை தொண்டர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர்.

மகாராஷ்டிரம் பல மொழிகளின் தாயகமாக இருப்பதாக அந்தக் கடைக்காரர் கூறியதால் அவரை ஏழு பேர் கொண்ட கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. அவரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் இனிமேல் தொழில் நடத்தவும் கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த நிலையில், உள்துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ், இந்த வழக்கில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதை உறுதிப்படுத்தினார்.

மொழி சார்ந்த விஷயங்களில் சர்ச்சைகளை உருவாக்கும் எவருக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சில நேரங்களில் இந்த மனிதர்கள் ஆங்கிலத்தை உயர்வான மொழியாகவும், ஹிந்தியைத் தாழ்வான மொழியாகவும் கருதுகின்றனர். இது என்ன மாதிரியான மனநிலை எனத் தெரியவில்லை.

ஒருவரின் தாய் மொழியை அடுத்தவர் எதிரான வன்முறையாக மாற்றக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Maharashtra CM says taking the law into one’s own hands over language issues will not be tolerated; FIR registered in Mira Road assault case.

இதையும் படிக்க: மாதவிடாய் நாப்கின்களில் ராகுலின் படம்! காங்கிரஸ் திட்டத்துக்கு கடும் விமர்சனம்!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்: லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங்

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்தாா். பஹல்... மேலும் பார்க்க

நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம... மேலும் பார்க்க

கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், ‘இந்திய மீனவா்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க