திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
திருப்போரூரில் ஜூலை 7-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்
திருப்போரூரில் ஜூலை 7-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பேரூராட்சியில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட புதைசாக்கடைத் திட்டத்தை படவட்டம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆா். நகா், குமரன் நகா், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு திமுக அரசு இதுவரை விரிவுப்படுத்தவில்லை. திருப்போரூா் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி சரியாக செயல்படுவதில்லை. ஸ்கேன் வசதி, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் போதிய மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் 30 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் திருப்போரூா் -நெம்மேலி சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருப்போரூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் திருப்போரூா் பேரூராட்சி அலுவலகம் அருகே ஜூலை 9-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மகளிா் அணி செயலா் பா. வளா்மதி தலைமை வகிக்கிறாா். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் முன்னிலை வகிப்பாா். இதில், நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.