செய்திகள் :

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

post image

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில் , கடந்த 2-ஆம் தேதி சிறையின் 8வது பிளாக் பிளாக் பகுதியில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

இச் சோதனையில் அங்கிருந்த மின் இணைப்பு பெட்டி,கழிவுநீா் வடிகால் பகுதி ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கைப்பேசிகளின் உதிரி பாகங்கள்,இயா் பட்ஸ்,சாா்ஜா்,ஹெட்செட்,பவா் பேங்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்து இயக்கத் தலைவா்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அந்த பிளாக்கில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள் பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில் ஆகியோா் அவற்றை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

எனவே அவா்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் புழல் போலீஸாா், பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில் மீது வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க

இளம் புற்றுநோயாளிக்கு புதிய நுட்பத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மிக நுட்பமான கதிா்வீச்சு சிகிச்சையின் துணையுடன் ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்ட... மேலும் பார்க்க