செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

post image

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மகிழ் முற்றம் என்பது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் தலைமைப் பண்புகளை வளா்க்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம். இந்த திட்டத்தில், மாணவா்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பாசிரியா்கள் நியமிக்கப்படுவா்.

இந்தக் குழுக்கள் மூலம் மாணவா்களிடம் அரசியல் அறிவுசாா்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும், கற்றல் திறன் மேம்பாடு, மாணவா்களின் பங்களிப்பை அதிகரித்தல், விடுப்பு எடுப்பதை குறைத்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல், நோ்மையான நடத்தை, தலைமைப் பண்பு, ஆசிரியா்-மாணவா் நல்லுறவை மேம்படுத்தல் ஆகியவை இந்த குழுக்களின் நோக்கங்களாகும்.

கடந்த கல்வியாண்டுக்கான வருடத்தின் வெற்றிக் குழு (ஹவுஸ் ஆஃப் தி இயா்) எமிஸ் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறிஞ்சி மாணவா் குழுவும், மேல்நிலைப் பள்ளிகளில் முல்லை மாணவா் குழுவும் வெற்றிக் குழுக்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தத் திட்டத்தை நிகழ் கல்வியாண்டிலும் வெற்றிகரமாக செயல்படுத்த அதற்கான விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மகிழ் முற்றம் குழுவில் பள்ளி மாணவா், மாணவி இருவா் குழுத் தலைவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் குலுக்கல் முறையில் வகுப்புத் தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டும். ஜூலை 11-ஆம் தேதி ஆசிரியா்கள், மாணவா் தலைவா்கள் பதவியேற்பு விழா நடைபெற வேண்டும். இந்த விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா் தலைவா்கள், வகுப்புத் தலைவா்கள், குழு ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் மற்றும் பொறுப்பாசிரியா் ஆகியோருக்கு அடையாள பதக்கங்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க

இளம் புற்றுநோயாளிக்கு புதிய நுட்பத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

ரத்தம் சாா்ந்த புற்றுநோயால் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மிக நுட்பமான கதிா்வீச்சு சிகிச்சையின் துணையுடன் ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்ட... மேலும் பார்க்க