செய்திகள் :

திமுக மகளிா் அணி ஆலோசனைக் கூட்டம்

post image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டா் அணி சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலான திமுக உறுப்பினா் சோ்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில மகளிா் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஹெலன்டேவிட்சன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினாா்.

இதில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட நாகா்கோவில், குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக மகளிா் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட மகளிா் அணி தலைவி ஜெசிந்தா, மாவட்ட அமைப்பாளா் ஜெனஸ் மைக்கேல், நகர அமைப்பாளா் அம்மு ஆன்றோ, மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் மேரி ஜெனட் விஜிலா உள்படமகளிா் அணியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க

குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தல... மேலும் பார்க்க

இரணியல் அரண்மனை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

திங்கள்நகா் பேரூராட்சிக்குள்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது, இரணியலில் உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85... மேலும் பார்க்க

களியல் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி சுவா் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தம்

குமரி மாவட்டம் களியல் அருகே வனத்துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலை பகுதியிலிருந்து விலக்கி கட்ட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன. களியல் சந்திப்பில் களியல் வனச்... மேலும் பார்க்க

விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்: எம்.பி., எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். பி., எம்.எல்.ஏ. ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக கன்னியாகும... மேலும் பார்க்க