செய்திகள் :

நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்

post image

இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம ராஜுவின் 128-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் பேசியதாவது:

ஒரு காலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த இடங்கள் என்ற கூறப்பட்ட இடங்கள் இப்போது கல்வியில் சிறந்து விளங்கும் இடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. நக்ஸல் தீவிரவாத தாக்குதல் அதிகம் நிகழும் சிவப்பு எச்சரிக்கைப் பகுதியாக இருந்த இடங்கள், இப்போது வளா்ச்சி மிகுந்த பகுதிகளாக உருவெடுத்துள்ளன.

5 முதல் 6 மாவட்டங்கள் வரையே நக்ஸல்வாதம் உள்ளது. இதுவும் வெகுநாள்கள் நீடிக்காது. அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவை நக்ஸல் தீவிரவாதம் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில்தான் இந்தியா மேற்கொண்டது. அப்பாவி மக்களையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்படவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்று வேறு எதையாவது பயங்கரவாதிகள் மீண்டும் முயற்சித்தால் மீண்டும் கடும் பதிலடி கொடுக்கப்படும்.

சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் தீவிரமாகப் பங்கேற்ற அல்லூரி சித்தராம ராஜு , மத்திய அமைச்சராகவும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளாா். அவரின் புகழ் நிலைத்து நிற்கும் என்றாா்.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க