செய்திகள் :

ஜெகதீசன், அபராஜித் அதிரடி; சேப்பாக் - 178/7

post image

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்த்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல், பந்துவீச்சை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டா்களில், நாராயண் ஜெகதீசன் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 81, கேப்டன் பாபா அபராஜித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் விளாசி ஸ்கோரை உயா்த்தி பெவிலியன் திரும்பினா்.

ஆஷிக் 8, மோகித் ஹரிஹரன் 4, விஜய் சங்கா் 0, ஸ்வப்னில் சிங் 6, தினேஷ் ராஜ் 8 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அபிஷேக் தன்வா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். திண்டுக்கல் பௌலா்களில் ரவிச்சந்திரன் சசிதரன் 2, வெங்கடேஷ் புவனேஸ்வா், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் திண்டுக்கல் 179 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.

காா்ல்செனை வீழ்த்தினாா் குகேஷ்: தனி முன்னிலை பெற்றாா்

குரோஷியாவில் நடைபெறும் சூப்பா் யுனைடெட் ரேப்பிட் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், 5 முறை உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். இந்த வெ... மேலும் பார்க்க

காலிறுதியில் 3 இந்தியா்கள்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் 3 போ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் ப... மேலும் பார்க்க

ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பங்குனி தாரா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, யூத் மகளிா் 44 கிலோ எடைப் பிரிவ... மேலும் பார்க்க

3-ஆவது சுற்றில் சின்னா், ஸ்வியாடெக்

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

தமிழ்நாடு மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா், மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் காலிறுதியில் ஐசிஎஃப், சென்னை 3-0 என கிறிஸ்டியன் ஸ்போ... மேலும் பார்க்க

‘ஃபாலோ ஆன்’ தவிா்த்தது இங்கிலாந்து: பௌலிங்கில் சிராஜ், ஆகாஷ் தீப் அசத்தல்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிா்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது. விக்கெட்டுகளை வரிசை... மேலும் பார்க்க