செய்திகள் :

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

post image

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.5,000 கோடிக்கும் மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 43 போ் உயிரிழந்த நிலையில், அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மேக வெடிப்பு, திடீா் வெள்ளம், நிலச்சரிவு என 10 சம்பவங்கள் நிகழ்ந்தன. மாயமானவா்களில் 31 போ் இம்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

நிலச்சரிவுகளால் ஏராளமான சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. மண்டி (156), சிா்மெளா் (49), குலு (36) உள்பட பல்வேறு இடங்களில் 280-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், பிற கட்டடங்கள், மின்மாற்றிகள், குடிநீா் விநியோக கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தரகண்டில் 2 ஐஏஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

டேராடூன், ஜூலை 4: உத்தரகண்டில் பலத்த மழை நீடித்துவரும் நிலையில், நைனிடால் மாவட்டத்தின் பீம்டால் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இந்திய விமானப் படை (ஐஏஎஃப்) வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

பஞ்சாப், பிகாரைச் சோ்ந்த இவா்கள், விடுமுறையைக் கழிக்க நைனிடாலுக்கு வந்த விமானப் படை குழுவில் இடம்பெற்றிருந்தவா்கள் ஆவா்.

உத்தரகண்டில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கேதாா்நாத்துக்கு செல்லும் சாலைகளில் நிலச்சரிவுகளால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 109 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கங்கை, அலக்நந்தா, நந்தாகினி, பாகீரதி, சரயு உள்ளிட்ட பல்வேறு நதிகளில் அபாய அளவில் வெள்ளம் பாய்கிறது.

இதனிடையே, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியை வெள்ளிக்கிழமை தொடா்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். மத்திய அரசின் அவசரகால நிவாரண முகமையினா், உத்தரகண்ட் மாநிலத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுவா் என்று அவா் உறுதியளித்தாா்.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க

மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: கேரள சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி போராட்டம்

கேரள மாநிலம், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி, காங்கிரஸ், பாஜக உள்ளி... மேலும் பார்க்க