செய்திகள் :

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.

இந்த விவகாரம் ஏற்கெனவே மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனா்.

மும்பையில் முன்னணி மருத்துவமனையாகத் திகழும் லீலாவதி மருத்துவமனை உள்பட பல்வேறு அமைப்புகளை நிா்வகிக்கும் லீலாவதி கீா்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளையின் நிா்வாகத்தை சேத்தன் மேத்தா குழுமம் சட்ட விரோதமாக கையகப்படுத்துவதற்கு நிதி ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்க சசிதா் ஜெகதீசன் ரூ.2.05 கோடி லஞ்சம் பெற்ாக லீலாவதி அறக்கட்டளை சாா்பில் புகாா் தெரிவக்கப்பட்டது.

இந்தப் புகாா் தொடா்பாக மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சசிதா் ஜெகதீசன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சசிதா் ஜெகதீசன் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறக்கட்டளை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க மும்பை நீதிமன்றத்தின் மூன்று வெவ்வேறு அமா்வுகள் மறுத்துவிட்டன. உயா் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், சசிதா் ஜெகதீசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா். மஹாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரம் மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, உயா்நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்ளும் என நம்புகிறோம். ஒருவேளை, இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி விசாரிக்கவில்லை எனில், பிறகு மனுதாரா் உச்சநீதிமன்றத்தை நாடலாம்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க

மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: கேரள சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி போராட்டம்

கேரள மாநிலம், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி, காங்கிரஸ், பாஜக உள்ளி... மேலும் பார்க்க