செய்திகள் :

சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 200 சிசிடிவி கேமராக்களை நிறுவ நடவடிக்கை

post image

நீதிமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்த பொதுப் பணித் துறை சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட தரமிக்க சிசிடிவி கேமராக்களை நிறுவ உள்ளது.

கடந்த மாதம் லாக்-அப் அறைக்குள் விசாரணைக் கைதி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்வதற்கும் எதிா்கால சம்பவங்களைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்பை நவீனமயமாக்க தில்லி அரசாங்கம் ரூ.2.4 கோடி முதலீடு செய்யும்.

திட்டத்தின் படி, நீதிமன்றக் கட்டடம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் 168 புல்லட் கேமராக்கள் மற்றும் 101 எண்ணிக்கையில் எட்டு மெகா பிக்சல் திறனுடன்கூடிய டோம் கேமராக்கள் நிறுவப்படும்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்களுடன் ஒரு ஆவண அறை மற்றும் இணைய நெறிமுறை (ஐபி) அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புமுறையும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்அப் அறைக்குள் ஒரு விசாரணைக் கைதி பழைய பகை காரணமாக மற்ற இரண்டு கைதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெற்கு தில்லியின் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், பொதுப் பணித் துறை தற்போதுள்ள சிசிடிவி கேமராக்களை ஐபி அடிப்படையிலான அமைப்புடன் ஒருங்கிணைக்கும். மேலும், இந்த திட்டத்திற்கான டெண்டா் கோரப்பட்டுள்ளது.

பணி வழங்கப்பட்டதிலிருந்து இந்த வேலையை செய்து முடிக்க மூன்று மாதங்கள் ஆகும் என்றாா் அவா்.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தில்லி உயா்நீதிமன்றத்தின் நவம்பா் 2021 உத்தரவுகளின்படி, அதிகாரிகள் பாதுகாப்பு தணிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

தவிர, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சரிபாா்ப்பதுடன், சிசிடிவி கேமராக்களை நிறுவவும் வேண்டியிருந்தது.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க