செய்திகள் :

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய திட்டத்தை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறு தானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் விளை பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் உயா்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளா்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகளும், 9 லட்சம் பழச்செடி தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன. இந்தத் தொகுப்புகளை 5 பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம், படவேடு ஆகிய இடங்களில் பதப்படுத்தும் மையங்கள், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், பாவூா்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், கரூா், அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா், சுங்குவாா்சத்திரம், திருப்பத்தூா், வேலூா் மாவட்டம் குடியாத்தம் ஆகிய இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

கோவை மாவட்டம் ஆனைமலை, நெகமம், காரமடை, மலையடிப்பாளையம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலபுதூா், நாயுடுமங்கலம், செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.103.38 கோடியில் கட்டப்பட்டுள்ள 52 வேளாண் கட்டடங்ளை காணொலி வழியாக முதல்வா் திறந்தாா்.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க