செய்திகள் :

Secularism: ``மதச்சார்பற்றவராக யாராலும் வாழ முடியாது.." - சங்கராச்சாரியார் பேச்சால் சர்ச்சை!

post image

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், "மதச்சார்பின்மை" என்ற வார்த்தை குறித்து சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம், நாட்டில் உள்ள ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

நேற்று (ஜூலை-3) தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப்பேட்டியில், ``மதச்சார்பின்மை" என்ற இந்த வார்த்தை முதலில் இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. பின்னர் தான் சேர்க்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரை, இந்த சொல் அரசியலமைப்பின் அடிப்படை தன்மையுடன் ஒத்துப்போகவில்லை, அதனால்தான் இது மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாகிறது.

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி
சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி

'தர்மம்' என்றால் சரி, தவறு பற்றி சிந்தித்து, சரியானதை ஏற்றுக்கொண்டு, தவறை நிராகரிப்பதாகும். மதச்சார்பற்றவராக யாராலும் வாழ முடியாது. எனவே இந்த வார்த்தை சரியல்ல." என்றார். இது மீண்டும் சமூக ஊடகங்களில் விவாதமாகியிருக்கிறது.

இதற்கிடையில், சிபிஐ எம்பி. பி.சந்தோஷ் குமார், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``பிரச்னைக்காக இதுபோன்ற விவாதங்களைத் தூண்டுவதை ஆர்.எஸ்.எஸ் நிறுத்த வேண்டிய நேரம் இது. மதச்சார்பின்மை என்ற இந்த வார்த்தைகள் தன்னிச்சையான செருகல் அல்ல. இந்தியாவின் அடிப்படை இலட்சியங்கள்.

P. Sandosh Kumar
P. Sandosh Kumar

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், மதச்சார்பின்மை பன்முகத்தன்மையில் ஒற்றுமையை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் சோசலிசம் நமது ஒவ்வொரு குடிமக்களுக்கும் நீதி மற்றும் கண்ணியத்தை உறுதி செய்கிறது. முதலில் இந்திய அரசியலமைப்பை உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்துங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK: ``பொதுமன்னிப்புக் கேட்டு பதவி விலகுங்கள் முதல்வரே!'' - ஆதவ் அர்ஜூனா காட்டம்!

'செயற்குழுக் கூட்டம்!"தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்ச... மேலும் பார்க்க

`ஒரு எல்லை; மூன்று எதிரிகள்' - பாக்.கிற்கு உதவிய இரண்டு நாடுகள் - ராணுவத் துணைத் தலைவர் பேச்சு

ஆபரேஷன் சிந்தூருக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, சீனா மற்றும் துருக்கி பாகிஸ்தானுக்கு உதவியதாக, ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார். ... மேலும் பார்க்க

ட்ரம்பின் தொலைபேசி அழைப்பு; ``அவர் கோபப்படுவார்..'' - கூட்டத்தை பாதியில் விட்டு கிளம்பிய புதின்!

ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் போன்கால் பேச்சுவார்த்தை - இது சமீபகாலம் தொடர்கதை ஆகும். நேற்றும் ட்ரம்ப் - புதி... மேலும் பார்க்க

Putin: ``எங்கள் இலக்குகளை எட்டும் வரை ரஷ்யா பின்வாங்காது..'' - ட்ரம்ப்பிடம் புதின் திட்டவட்டம்!

ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ அதன் இலக்குகளை அடையாமல் பின் வாங்காது என்றும் ஆனாலும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகக இருப்பதாகவும் தெரிவித்ததாக ரஷ்... மேலும் பார்க்க

`பாரத மாதா படம்' - கவர்னர் நிகழ்ச்சியை ரத்து செய்த கேரள பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட் - என்ன நடந்தது?

கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது ... மேலும் பார்க்க