செய்திகள் :

20 நாள்களுக்குப் பின்... ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்!

post image

ஈரான் நாட்டில் 20 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பன்னாட்டு விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.

ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனும் பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் தொடங்கியது.

அதன்பின்னர், இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியதுடன், பயணிகள் விமானம் உள்பட அனைத்து வகையான விமானங்களின் சேவைகளுக்கும் தடை விதித்தன.

12 நாள்கள் நடைபெற்ற அந்தப் போரானது நிறுத்தப்படுவதாக, கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனை, இருநாடுகளும் ஏற்றுக்கொண்டதன் மூலம் தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானில் இயல்புநிலைக்கு திரும்பும் முயற்சியாக சுமார் 20 நாள்கள் கழித்து தற்போது பன்னாட்டு நகரங்களுக்கு பயணிகள் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி பன்னாட்டு விமான நிலையத்தில், துபாய் நாட்டிலிருந்து சென்ற முதல் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், வரும் நாள்களில் குறிப்பிட்ட சில பன்னாட்டு நகரங்களுக்கான விமானங்கள் இயக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

International flights have resumed in Iran after 20 days.

இதையும் படிக்க:உலகின் முதல் நாடாக தலிபான் அரசை அங்கீகரிக்கும் ரஷியா!

நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால், 7 நாள்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் பரவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ... மேலும் பார்க்க

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்க... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுத... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க