செய்திகள் :

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

post image

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தீ பிடித்து எரிந்ததோடு கரும் புகையும் எழுந்தது.

தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அவர்கள் சம்பவ இடத்தை அடைந்ததும் மேலும் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டன.

இந்த சம்பவத்தில் 20 பேர் லேசான காயங்கள் அடைந்தன. அதில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 8 காவல் அதிகாரிகளும், ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவர்.

பத்து குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் அல்லது அருகிலுள்ள கட்டடங்களில் சிக்கியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றியுள்ள பகுதி முழுவதும் சோதனை செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Summary

A gas station exploded early on Friday in southeastern Rome, injuring at least 20 people, including eight police officers and a firefighter, local authorities and rescuers said.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை!

நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால், 7 நாள்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் பரவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ... மேலும் பார்க்க

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்க... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?

ஃபாக்ஸ்கான் நிறுவனமானது, 300 சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை, அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐஃபோன் அசெம்பிள் நிறுவனமா... மேலும் பார்க்க