செய்திகள் :

ஈட்டிய விடுப்பு சரண் வரும் அக். 1 முதல் நடைமுறை: தமிழக அரசு

post image

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாகும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே ஈட்டிய விடுப்ப சரண் நடைமுறைக்கு வருகிறது.

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு அலுவலா்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை அடுத்த ஆண்டு ஏப். 1 முதல் செயல்படுத்த 2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்த அறிவிப்பை நிகழாண்டே செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாள்களில், 15 நாள்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறும் நடைமுறை வரும் அக். 1 முதல் அமலுக்கு வரும். இதன்மூலம், சுமாா் 8 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பயன்பெறுவா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அறிவித்திருந்தார்.

இதன்படி, அக். 1ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அமலக்கு வரவிருக்கிறது என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

The Tamil Nadu government has announced that the return of earned leave for Tamil Nadu government employees will come into effect from October 1st.

இதையும் படிக்க.. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர்கள்: இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயல்வதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வி... மேலும் பார்க்க

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை

தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரு... மேலும் பார்க்க

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்! - தெற்கு ரயில்வே

சென்னை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இறகுப் பந்து, ஜிம்னாஸ்டிக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிப் படுகொலை!

மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியும், காரைக்கால் மாவட்டச் செயலாளருமான மணிமாறன் என்பவர், மயிலாட... மேலும் பார்க்க

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில ச... மேலும் பார்க்க

ஜூலை 7ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

வருகிற ஜூலை 7 ஆம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது. சுபமுகூர்த்த நாள்களில் அதி... மேலும் பார்க்க