பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில சேர்க்கை பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு, தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை தோப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் முதல், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்திலேயே மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.