செய்திகள் :

டிரம்ப்பின் சம்பளம் எவ்வளவு?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஊதிய விவரம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஊதிய விவரக் குறிப்பில், அதிபர் வருமானமாக டிரம்ப்புக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் (சுமார் ரூ. 3.4 கோடி) அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி பயணத்துக்காக ரூ. 85.4 லட்சம், இதர செலவுகளுக்காக ரூ. 42.7 லட்சம், பொழுதுபோக்குக்காக ரூ. 16.2 லட்சமும் வழங்கப்படுகிறதாம். மொத்தமாக, அவருக்கு ரூ. 4.85 கோடியை வெள்ளை மாளிகை அளிக்கிறது.

அவரின் துணை உதவியாளர்களுக்கு ரூ. 1.3 கோடி முதல் ரூ. 1.49 கோடி ஆண்டு வருமானமும், சிறப்பு உதவியாளர்களுக்கு ரூ. 1.28 கோடி வரையிலும், அதிபருக்கான உரை எழுத்தாளர்களுக்கு ரூ. 78 லட்சம் வரையிலும், 108 இளநிலை ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 68.3 லட்சம் வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது.

டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின்போது வழங்கப்பட்ட ஊதியத்தை, பல்வேறு அரசுத் துறைகளுக்கு நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது, இரண்டாவது பதவிக்காலத்திலும் அவ்வாறு வழங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிக்க:ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

Here is how much President Trump earns

நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால், 7 நாள்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் பரவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ... மேலும் பார்க்க

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்க... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுத... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க