செய்திகள் :

ஜடேஜா குறித்து நடுவரிடம் தொடர்ந்து முறையிட்ட பென் ஸ்டோக்ஸ்! எதற்காக?

post image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில், 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 269 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 4) இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

நடுவரிடம் முறையிட்ட பென் ஸ்டோக்ஸ்

ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று (ஜூலை 3) இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் ஆபத்தான பகுதிகளில் ஓடுவது குறித்து நடுவர்களிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் முறையிட்டது குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு ஆடுகளத்தை விளையாடுவதற்கு கடினமாக்க வேண்டும் என எந்த எண்ணமும் இல்லை. எனக்கு நானே ஆடுகளத்தை கடினமாக்கிக் கொண்டதாக நினைக்கிறேன். வேகப் பந்துவீச்சாளர்களும் ஆடுகளத்தின் ஆபத்தான பகுதிகளில் ஓடுகிறார்கள். அதனால், அதனை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நான் ஆடுகளத்தில் ஓடுவதாக அவர் (பென் ஸ்டோக்ஸ்) தொடர்ந்து நடுவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். ஆடுகளத்தில் ஓடி பேட்டர்களுக்கு ஆடுகளத்தை கடினமாக்க வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஓரிரு முறை தற்செயலாக ஆடுகளத்தின் ஆபத்தான பகுதிகளில் ஓடியிருப்பேன். ஆனால், எதையும் வேண்டுமென்று செய்யவில்லை என்றார்.

England captain Ben Stokes has repeatedly complained to the umpire about Indian all-rounder Ravindra Jadeja.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வீரர்... ஜடேஜா படைத்த புதிய சாதனை!

ஜேமி ஸ்மித் 157* ரன்கள், ஹாரி ப்ரூக் 140* ரன்கள்; வலுவாக மீண்டு வரும் இங்கிலாந்து அணி!

ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அசத்தலான சதங்களால், தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ... மேலும் பார்க்க

148 ஆண்டுகளில்.. வரலாற்றுச் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!

இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித், 148 ஆண்டுகளில் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: அஸ்வினின் திண்டுக்கல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியின் இன்றிரவு (ஜூலை 4) திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதுகின்றன. லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலா... மேலும் பார்க்க

கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் அலெக்ஸ் கேரி..!

ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான அலெக்ஸ் கேரி இந்தாண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமானார் அலெக்ஸ் கேரி. 33 வயதாகும் இவர் இது... மேலும் பார்க்க