செய்திகள் :

மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம்! பிகாரில் புதிய சர்ச்சை!

post image

பிகாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில், ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியின், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பிரியதர்ஷினி உதான் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச மாதவிடாய் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காங்கிரஸ் பெண்களுக்கு வழங்கிய மாதவிடாய் நாப்கின்களின் அட்டையில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பெண்களின் முக்கிய பிரச்னைகளை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும், பழமையான கட்சி தற்போது சித்தாந்த பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

பிகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண் வாக்காளர்களைக் கவரும் நோக்கத்தோடு காங்கிரஸ் கட்சி இத்தகையச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

”முதல்வர் நிதிஷ் குமார் பெண்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். தேர்தலும் நடைபெறவுள்ளது. மரியாதையின் சின்னமாகப் பெண்கள் கருதப்படுவார்கள். ஆனால், நீங்கள் உங்களது அதிகாரத்தை வெளிகாட்ட நாப்கின்களில் உங்களது படத்தை அச்சிட்டுள்ளீர்கள்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, பிகாரில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Various political parties are criticizing the fact that Rahul Gandhi's picture is printed on menstrual napkins distributed to women by the Congress party in Bihar.

இதையும் படிக்க: கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது. ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 28ல் கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுட... மேலும் பார்க்க