செய்திகள் :

Odisha: கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ தோளில் சுமந்த மக்கள்; மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்

post image

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உதவி கேட்டனர்.

ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்தவர்கள் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போன் செய்து, ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால், மோசமான சாலை காரணமாக ஆம்புலன்ஸ் போஜ்குதா கிராமத்திற்கு10 கி.மீ -க்கு முன் நின்றுவிட்டது.

இதனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்புகளை ஒன்று சேர்த்து ஸ்டெச்சர் போன்ற ஒரு தொட்டிலை செய்தனர்.

அதில் கர்ப்பிணி பெண்ணை அமர வைத்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு தோளில் சுமந்து சென்றனர். துஷாய்பாடா என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு ஆம்புலன்ஸ் நின்றது. கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் கைராபுட் என்ற இடத்தில் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாலை 6 மணிக்கு அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மோசமான சாலை காரணமாக கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மோசமான சாலையை உடனே சரி செய்யவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரசவ காலத்தில் 25 ஆயிரம் பெண்கள் உயிரிழந்து வருகின்றனர் என்பது கவலைக்குரியது.

கேரளா: 15 அடி ராஜநாகத்தை அசால்டாக பிடித்த பெண் - யார் இந்த ஜி.எஸ் ரோஷ்னி?

கேரளா வனத்துறையைச் சேர்ந்த ஜி.எஸ்.ரோஷ்னி என்ற பெண் வனத்துறை அதிகாரி 14-15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அசால்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீடியோ வைரலாவது இது முதன்முறை அல்லது. பெரிய அளவிலன... மேலும் பார்க்க

5 ஆண்டுகள்... 5 மாநிலங்கள் - `785 பேரைக் கொன்ற மனைவிகள்!' - அச்சமூட்டும் `அதிர்ச்சி' தகவல்!

சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான மல்ஹோத்ரா; கேரள சுற்றுலாதுறை திட்டத்தில் பங்கேற்றது எப்படி?

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாள... மேலும் பார்க்க

SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!

ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக... மேலும் பார்க்க

Custodial Death: ``நானும் அம்மாவும் அழுதுகொண்டே இருக்கிறோம்" - முனைவர் நிகிதா வெளியிட்ட ஆடியோ!

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் மீது காவல் நிலைய... மேலும் பார்க்க

Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்கு கடும் எதிர்ப்பு!

ரஷ்யாவைச் சேர்ந்த பாக்ஸிங் வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா (Anastasia Luchkina) கிரிமியாவில் உள்ள டைகன் சஃபாரி பார்க் என்ற வன விலங்கு பூங்காவில் ஓராங்குட்டான் குரங்குக்கு ஈ-சிகரெட் புகைக்கக் கொடுத்தது க... மேலும் பார்க்க