செய்திகள் :

ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடிக்கைகள் முழங்க ஊா்வலமாகக் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னா், புனிதநீா் யாக சாலையில் வைக்கப்பட்டு, சிவாசாரியா்கள் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தினா். 

இதையடுத்து, வேதமந்திரங்கள் முழங்க ஜம்புதுரை  அம்மனுக்கு புனிதநீா், இளநீா், பால், நெய், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜம்புதுரை அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஜம்புதுரை  அம்மன் மக்கள் நல அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம மக்கள் செய்தனா். 

மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹி... மேலும் பார்க்க

எலக்ட்ரீசியன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க

பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்

பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சரளப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி (87). இவா... மேலும் பார்க்க