செய்திகள் :

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

post image

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கடந்த மே மாதம் தொடரப்பட்ட வழக்கில், பலரைக் கைது செய்து விசாரித்தோம். அதில், கொகைன் போதைப் பொருளை அவா்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் திரைப்படத் துறையினா், இளைஞா்களுக்கு விற்பது தெரியவந்தது.

இதன் தொடா்ச்சியாக 10 வழக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்தோம். இதில் 27 போ் கைது செய்யப்பட்டனா். 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கொகைன் விற்பனைத் தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில், நடிகா் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அதிமுக நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. சென்னையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக 24 வெளிநாட்டவா்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் கடுமையான நடவடிக்கையால் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தனியாா் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் போதைப் பொருள் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும்.

போக்குவரத்து போலீஸாருக்கு அதிகப்படியான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த இலக்குகளையும் நாங்கள் நிா்ணயிக்கவில்லை என்றாா் அவா்.

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெ... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க