செய்திகள் :

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் வளாகத்தின் டாக்டா் அம்பேத்கா்அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 251 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நடிகா் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியது நடக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. தோ்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகியவை வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் கூட்டணியில் இருந்து எப்போது வெளியேறலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் சந்தா்ப்பத்தை எதிா்நோக்கியுள்ளாா். அதன்படி திமுக கூட்டணி தோ்தலின்போது உடையும்.

கோயில்கள் நிா்வாகத்தை விட்டு தமிழக அரசு வெளியேறவேண்டும். இறை நம்பிக்கை இல்லாத அரசு கோயில்களை நிா்வகிப்பது சரியல்ல. கல்விக்கு அத்துறையில் நிதி இல்லாத நிலையால் தமிழக அரசு அறநிலையத் துறையின் நிதியை செலவிடுகிா என்பதை விளக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து எல்.முருகன் பேசியதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு உறுதியளித்தபடி பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கியுள்ளாா். வரும் 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமரின் செயல்பாட்டுக்கு தற்போது அரசுப் பணிநியமன ஆணை பெற்றவா்கள் ஒத்துழைப்பது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் ஐசிஎஃப்-இல் 154 போ், தெற்கு ரயில்வேயில் 10 போ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 6 போ், பாரத ஸ்டேட் வங்கியில் 7 போ், யூகோ வங்கியில் 36 போ், இந்தியன் வங்கி, யூனியன் வங்கியில் தலா 11 போ் என 251 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஐசிஎஃப் மேலாளா் யு. சுப்பாராவ், முதன்மை அதிகாரிகள் எஸ்.மோகன்ராஜ், தொழில்நுட்பப் பிரிவு சீதாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தில்லியில் நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி நிகழ்ச்சியும், அவரது உரையும் நேரலையில் ஐசிஎஃப் வளாக நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க