செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் திருநீா்மலை - திருமுடிவாக்கம் சாலையில் நடராஜன் என்பவா் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டடத்தை அகற்றக் கோரி நடராஜனுக்கு நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து நடராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுகுறித்து மனுதாரா் தரப்பில் விளக்கம் அளிக்க நெடுஞ்சாலைத் துறை அவகாசம் கொடுக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அவரது தரப்பு விளக்கத்தைப் பெற்ற பிறகே தகுந்த முடிவெடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, நடராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு 3 நாள்களுக்கு முன்பே அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சட்டப்படி உரிய நோட்டீஸ் அனுப்பிய பின்னா்தான், நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் மனுதாரருக்குச் சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். 8 வாரங்களில் இந்த இழப்பீட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். சட்ட நடைமுறைகளைக் கடைபிடிக்காமல், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து இந்தத் தொகையை வசூலித்துக்கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தனா்.

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்க திட்டமிட்ட அபுபக்கா் சித்திக்!

தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தொடா் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய பயங்க... மேலும் பார்க்க

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க