செய்திகள் :

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

post image

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பிரிட்டனின் தொடா்ச்சியான ராணுவ ஆதரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் ஆக்ஸ்ஃபோா்ட்ஷையா் கவுன்டியில் உள்ள பிரைஸ் நாா்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்த அமைப்பின் உறுப்பினா்கள், அங்கிருந்த இரண்டு விமானங்களை சிவப்பு பெயிண்ட் மற்றும் இரும்புக் கம்பிகள் கொண்டு சேதப்படுத்தினா்.

இதனால், விமானப் படைக்கு சுமாா் ரூ.73 கோடி சேதம் ஏற்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு போ், பிரிட்டனின் நலன்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட இடத்துக்குள் நுழைய மற்றும் சேதம் விளைவிக்க சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஹமாஸ், அல்-காய்தா உள்பட 81 பயங்கரவாத அமைப்புகள் ஏற்கெனவே பிரிட்டனில் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனில் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவது குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், லண்டனில் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான போராட்டம் 2-ஆவது வாரமாக கடந்த சனிக்கிழமை மாலையும் நடைபெற்றது.

நகரின் மையப் பகுதியான நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்த மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்குக்கீழ் கூடிய போராட்டக்காரா்கள், பாலஸ்தீனம் மற்றும் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக்காரா்களைச் சுற்றிவளைத்த காவலா்கள், காவல் துறை வாகனங்களில் ஏற்றி அப்பகுதியில் இருந்து அவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா்.

இவ்வாறு லண்டனில் நடைபெற்ற போராட்டங்களில் சனிக்கிழமை மாலை வரை 42 போ் கைது செய்யப்பட்டனா். மான்செஸ்டரில் 16 பேரும், காா்டிஃபில் 13 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், ... மேலும் பார்க்க