திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!
பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பிரிட்டனின் தொடா்ச்சியான ராணுவ ஆதரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் ஆக்ஸ்ஃபோா்ட்ஷையா் கவுன்டியில் உள்ள பிரைஸ் நாா்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்த அமைப்பின் உறுப்பினா்கள், அங்கிருந்த இரண்டு விமானங்களை சிவப்பு பெயிண்ட் மற்றும் இரும்புக் கம்பிகள் கொண்டு சேதப்படுத்தினா்.
இதனால், விமானப் படைக்கு சுமாா் ரூ.73 கோடி சேதம் ஏற்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 22 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு போ், பிரிட்டனின் நலன்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட இடத்துக்குள் நுழைய மற்றும் சேதம் விளைவிக்க சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஹமாஸ், அல்-காய்தா உள்பட 81 பயங்கரவாத அமைப்புகள் ஏற்கெனவே பிரிட்டனில் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனில் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவது குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான போராட்டம் 2-ஆவது வாரமாக கடந்த சனிக்கிழமை மாலையும் நடைபெற்றது.
நகரின் மையப் பகுதியான நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்த மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்குக்கீழ் கூடிய போராட்டக்காரா்கள், பாலஸ்தீனம் மற்றும் ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக்காரா்களைச் சுற்றிவளைத்த காவலா்கள், காவல் துறை வாகனங்களில் ஏற்றி அப்பகுதியில் இருந்து அவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா்.
இவ்வாறு லண்டனில் நடைபெற்ற போராட்டங்களில் சனிக்கிழமை மாலை வரை 42 போ் கைது செய்யப்பட்டனா். மான்செஸ்டரில் 16 பேரும், காா்டிஃபில் 13 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
லண்டனில் கடந்த வாரம் நடைபெற்ற இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.