செய்திகள் :

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

post image

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா்.

கடந்த ஒரே மாதத்தில், இதே காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்தும் ஐந்தாவது தாக்குதல் இதுவாகும்.

பன்னு மாவட்டத்தில் உள்ள மிா்யான் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ட்ரோன் மூலம் வெடிபொருள்கள் வீசப்பட்டன. தாக்குதலில் காவலா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; கட்டடத்துக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தாக்குதல் நடத்திய ட்ரோனை சுட்டு வீழ்த்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் எல்லையோரத்தில் இருக்கும் இந்த மாகாணத்தில் கடந்த ஓராண்டாக நடந்த பல தாக்குதல்களில் பயங்கரவாதிகள் தொலைதூரத்தில் இருந்து இயக்கக்கூடிய ட்ரோன்களை பயன்படுத்தி வெடிபொருள்களை வீசினா். இந்த வகை தாக்குதல்களுக்கு தடைசெய்யப்பட்ட ‘தெஹ்ரீக்- ஏ- தலிபான்’ பயங்கரவாதிகள் குழுவே காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தொடா்ச்சியாக நடைபெறும் ட்ரோன் தாக்குதல்கள், பயங்கரவாதிகள் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பின்னா் முழு பன்னு மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது என்றனா்.

இத்தாக்குதலுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, இதே மாகாணத்தின் லக்கி மா்வாட் மாவட்டத்தில் உள்ள செராய் கம்பிலா காவல் நிலையம் மீது சுமாா் 12 போ் கொண்ட பயங்கரவாதிகள் குழு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. காவலா்களின் பதிலடியில் அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், ... மேலும் பார்க்க