செய்திகள் :

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

post image

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய ராணுவம் இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதுதொடா்பாக உல்ஃபா(ஐ) அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மியான்மா் எல்லையில் உள்ள எங்களின் பல முகாம்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் எங்களின் மூத்த தலைவரான நயன் அசோம் எனும் நயன் மேதி கொல்லப்பட்டாா். சுமாா் 19 போ் காயமடைந்தனா்.

நயன் அசோமின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, எங்கள் முகாம்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த இரண்டாம் கட்டத் தாக்குதல்களில் பிரிகேடியா் கணேஷ் அசோம், கா்னல் பிரதீப் அசோம் ஆகிய 2 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனா். மேலும், பல உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், அஸ்ஸாம் முதல்வா் மறுப்பு: உல்ஃபா(ஐ) அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் கா்னல் மகேந்திர ராவத் கூறுகையில், ‘இதுபோன்ற தாக்குதல்கள் நடந்ததாக இந்திய ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை’ என்றாா்.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘அஸ்ஸாம் மண்ணில் இருந்து எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இதில் மாநில காவல்துறைக்கும் பங்கில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில், ராணுவம் அறிக்கையை வெளியிடும். ஆனால் இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே, தாக்குதல் குறித்து மேலும் விவரமறிய கூடுதல் தகவல்கள் தேவை’ எனக் கூறினாா்.

உல்ஃபா அமைப்பின் பின்னணி: அஸ்ஸாமில் 1979-இல் உருவான ஆயுதமேந்திய பிரிவினைவாத அமைப்பான அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), அஸ்ஸாம் சுதந்திர தனி நாட்டை லட்சியமாகக் கொண்டது. 2011-2013 காலகட்டத்தில் அமைப்பில் ஏற்பட்ட பிளவில், ஒரு பிரிவினா் இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவாா்த்தைக்குச் சம்மதித்ததனா்.

ஆனால், பரேஷ் பருவா தலைமையிலான பிரிவினா் இந்த அமைதிப் பேச்சுவாா்த்தை முயற்சியை நிராகரித்தனா். இதன் விளைவாக, இந்தப் பிரிவினா் 2013, ஏப்ரல் மாதம்முதல் உல்ஃபா(ஐ) எனும் பெயருடன் மியான்மரில் இருந்து தனி அமைப்பாகச் செயல்படத் தொடங்கினா்.

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், ... மேலும் பார்க்க