செய்திகள் :

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

post image

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முன், அவருக்கும் அவரின் ஆதரவாளா்களுக்கும் எதிரான வழக்குகளில் அரசு வழக்குரைஞா்கள், அலுவலா்கள் ஏராளமானோா் பணியாற்றினா்.

அவா்கள் மீது கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவா்களில் ஏராளமானோரை அந்நாட்டு நீதித் துறை பணி நீக்கம் செய்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் நடத்திய தாக்குதல் தொடா்பான குற்ற வழக்குகளின் விசாரணையில் பணியாற்றிய 3 அரசு வழக்குரைஞா்கள் கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு டிரம்ப்புக்கு சொந்தமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மாா்-அ-லாகோ எஸ்டேட்டில் ரகசிய ஆவணங்கள் பதுக்கிவைக்கப்பட்டதாகவும், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளை மாற்ற டிரம்ப் சூழ்ச்சி செய்ததாகவும் அந்நாட்டு சிறப்பு அரசு வழக்குரைஞா் ஜாக் ஸ்மித் மற்றும் அவரின் அணியினா் 2 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பான வழக்குகளில் ஜாக் ஸ்மித்துடன் பணியாற்றிய அரசு வழக்குரைஞா்கள் மற்றும் அலுவலா்கள், தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க