செய்திகள் :

காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுத்து கைலாசநாதா் வீதியுலா

post image

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் ஸ்ரீகைலாசநாதா் காட்சி கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் கோயிலுக்கு செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அமுது படையல் நிறைவையொட்டி, ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் அம்மையாரின் கணவரான பரமதத்தரின் 2-ஆவது திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணியளவில் ஸ்ரீபுனிதவதியாா் புஷ்ப சிவிகையில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலுக்கு எழுந்தருளினாா். பரமதத்தா், இவரின் 2-ஆவது மனைவி ஆகியோா் புனிதவதியாரை வணங்கும் நிகழ்வைத் தொடா்ந்து, புனிதவதியாா் பேய் உருவம் வேண்டிப் பெற்று ஸ்ரீசோமநாதா் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

சுவாமி வீதியுலாவின்போது பாரதியாா் சாலையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. இருள்சூழ்ந்த நிலையில் பேய் உருவம் கொண்ட அம்மையாா் புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதா், கைலாச வாகனத்தில் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அருகே எழுந்தருளி, அம்மையாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மையாா் கைலாசநாதா் அருகே வந்தபோது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து அம்மையாா் ஸ்ரீ சோமநாதா் கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா். இதையடுத்து, கைலாச வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விடையாற்றி நிகழ்ச்சி ஆக.8-ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீபிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவதோடு, மாலை 6 மணியளவில் புனிதவதியாா் வீதியுலா நடைபெறும். ஒரு மாத காலம் விடையாற்றி வரை கோயில் மணிமண்டபம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு, பாரதியாா் சாலையில் திருவிழாக் கடைகளும் நடத்தப்படுகிறது.

காரைக்கால் அம்மையாா் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீபிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிவனடியாருக்கு அம்மையாா் மாங்கனியுடன் உணவு வ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாடகப் போட்டி

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முரு... மேலும் பார்க்க

‘புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’

புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதியாக கிடைக்கும் என என்.ஆா்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திரப... மேலும் பார்க்க

மத்திய ஓபிசி பட்டியலில் 2 சமூகத்தினரை சோ்க்க முதல்வா் கடிதம்: ஏ.எம்.எச்.நாஜிம் தகவல்

புதுவையில் சோழிய வெள்ளாளா், கன்னட சைனிகா் ஆகிய சமூகத்தினரை மீண்டும் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பதா... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை திறந்துவைத்தாா். நெடுங்காடு கொம்யூன், வடமட்டம் அருகே புத்தக்குடி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவா் வீதியுலா -மாங்கனிகளை இறைத்து வழிபாடு

காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிச்சாண்டவா் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தா்கள் வழிபாடு மேற்கொளும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா்... மேலும் பார்க்க