செய்திகள் :

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

post image

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்கள் சுமத்தப்பட்டதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேகாலயாவில் இருந்து தப்பி ஓடிய பிறகு சோனம் தங்கியிருந்த இந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தோமர் ஆவார். மேலும் பல்பீர் அந்த குடியிருப்பின் பாதுகாப்பு காவலராக இருந்தார். இவர்கள் மீது நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் ஆதாரங்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கடந்த மே 23ஆம் தேதி மேகாலயாவுக்கு மனைவி சோனமுடன் தேனிலவு சென்றபோது காணாமல் போனார். ஜூன் 2 ஆம் தேதி கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ரா பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து அவரது சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.

தலைவன் தலைவி கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மே 11 ஆம் தேதி சோனமை, ராஜா மணந்தார். ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ய ஆகாஷ் ராஜ்புத், விஷால் சிங் சௌஹான் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோரை பயன்படுத்தியதாகக் சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹா மீது குற்றம் சாட்டப்பட்டது.

சோனம், ராஜ் குஷ்வாஹா மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று கொலையாளிகளும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

A local court here has granted bail to Lokendra Singh Tomar and Balbir Ahirwar, two co-accused in the murder of Indore businessman Raja Raghuvanshi in May this year.

மொழி குறித்து அவதூறு: ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனை! வைரல் விடியோ

மராத்தி மொழியை அவதூறாகப் பேசியதாக சிவசேனை கட்சியைச் (உத்தவ் பிரிவு) சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் ஒருவர் மராத்தி... மேலும் பார்க்க

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க