செய்திகள் :

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

post image

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுரேந்திர குமார்(50) சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் ஒரு வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு குமார் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் போது அவர் பலியாகினார்.

உடற்கூராய்வுக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்!

முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி, மணல் சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் ராணிதலாப்பில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜூலை 4 ஆம் தேதி பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்தது.

மற்றொரு வழக்கில், ஜூலை 11 ஆம் தேதி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் மளிகைக் கடை உரிமையாளர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து அரகேறி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A 50-year-old rural health officer, identified as Surendra Kumar, was shot dead in Sheikhpura village under Pipra locality of Patna on Saturday night.

மொழி குறித்து அவதூறு: ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனை! வைரல் விடியோ

மராத்தி மொழியை அவதூறாகப் பேசியதாக சிவசேனை கட்சியைச் (உத்தவ் பிரிவு) சேர்ந்த நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் ஒருவர் மராத்தி... மேலும் பார்க்க

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க